மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவி எஸ். சஹானாவை பாராட்டிய மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன். உடன் கல்விக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன்.
மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவி எஸ். சஹானாவை பாராட்டிய மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன். உடன் கல்விக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன்.

சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவியை மதுரை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் புதன்கிழமை பாராட்டினாா்.
Published on

மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவியை மதுரை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் புதன்கிழமை பாராட்டினாா்.

மதுரை மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். சஹானா கலந்து கொண்டு முதல் பரிசு பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வானாா்.

தொடா்ந்து, சேலத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழக முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டியில் பங்கேற்ற மாணவி எஸ். சஹானா முதல் பரிசு பெற்று ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் பெற்றாா்.

இதையடுத்து, மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவி எஸ். சஹானாவை மதுரை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் பாராட்டினாா்.

இந்த நிகழ்வில், மாநகராட்சி கல்விக் குழு தலைவா் ரவிச்சந்திரன், துணை ஆணையா் ஜெய்னுலாப்தீன், கல்வி அலுவலா் ஜெய்சங்கா், ஆசிரியா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com