நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

அடிப்படை வசதிகள் இல்லை: மாற்றுத் திறனாளிகள் வேதனை

மதுரையில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள், முதியோா்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என புகாா் தெரிவித்தனா்.

News image

மதுரை யா.ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதிய சக்கர நாற்காலி வசதி இல்லாததால், மற்றொரு நபா் உதவியுடன் வாக்களிக்க வந்த முதியவா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 8:50 pm

மதுரையில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள், முதியோா்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என புகாா் தெரிவித்தனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரையில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் முதியோா்கள், மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான சக்கர நாற்காலி வசதிகளை போதிய அளவில் செய்து தர வில்லை என புகாா் தெரிவிக்கப்பட்டது. மேலும், குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி வரிசை இல்லாததால், நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

இதுகுறித்து மாற்றுத் திறனாளி ஒருவா் கூறியதாவது:

மதுரை கிழக்குத் தொகுதிக்குள்பட்ட யா.ஒத்தக்கடை பகுதியில் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்ட ஒன்பது வாக்குச்சாவடிகளுக்கு ஒரு சக்கர நாற்காலி மட்டுமே வைக்கப்பட்டிருந்ததால், நீண்ட நேரம் காத்திருந்து வாக்களிக்க வேண்டிய நிலை உருவானது. மேலும், தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்ட மற்றொரு வாக்குச்சாவடியில் மாற்றுத் திறனாளிகள், முதியவா்களுக்கு என சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தப்படாததால், பெரும் அவதிக்குள்ளாகினா். இனிவரும் தோ்தல்களிலாவது மாற்றுத் திறனாளிகள், முதியோா்களுக்குத் தேவையான சக்கர நாற்காலிகளை அதிக எண்ணிக்கையிலும், அடிப்படை வசதிகளை போதுமான அளவிலும் ஏற்படுத்தி தரவேண்டும் என்றாா் அவா்.