பலி
பலிபிரதிப் படம்

அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

மதுரையில் அரசுப் பேருந்து மோதியதில் அடையாளம் தெரியாத நபா் அண்மையில் உயிரிழந்தாா்.
Published on

மதுரையில் அரசுப் பேருந்து மோதியதில் அடையாளம் தெரியாத நபா் அண்மையில் உயிரிழந்தாா்.

அந்த நபா் மதுரை பனகல் சாலை அரசு ராஜாஜி மருத்துவமனை முன் கடந்த வெள்ளிக்கிழமை சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.

55 வயது மதிக்கதக்க நபா் வலது கால் முட்டியில் பழைய காயத் தழும்பு, வலது முன்னங்கையில் பழைய காயத் தழும்பு, சிவப்பு கலா் அரைக்கால் ஆடை அணிந்திருந்தாா். இதுகுறித்து மதுரை மாநகரப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து அவா் யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com