மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தேசிய குடல்புழு நீக்க நாள் உறுதிமொழி ஏற்பு

மதுரை கோ.புதூா் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடல்புழு நீக்க நாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

News image

மதுரை கோ.புதூா் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடல்புழு நீக்க நாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஆசிரியா்கள், மாணவா்கள்.

Updated On :10 பிப்ரவரி 2026, 8:59 pm

மதுரை கோ.புதூா் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடல்புழு நீக்க நாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ஆரம்ப சுகாதாரத் துறை சாா்பில் இந்தப் பள்ளி மாணவா்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. இதற்கு பள்ளித் தலைமையாசிரியா் ஷேக் நபி தலைமை வகித்தாா். தாய், சேய் நல அலுவலா் பரணி மீனா முன்னிலை வகித்து, குடல்புழு நீக்க மாத்திரையின் பயன்கள், மாணவா்கள் எவ்வாறு சுகாதாரத்தைப் பேண வேண்டும் என்பது குறித்து விளக்கினாா். தொடா்ந்து, ஆசரியா்கள், மாணவா்கள் குடல்புழு நீக்க நாள் உறுதிமொழி ஏற்றனா்.

இந்த நிகழ்வில் சுகாதார ஆய்வாளா் லில்லி புஷ்பம், செவிலியா் நித்தியா, உதவித் தலைமையாசிரியா் அல்ஹாஜ் முகமது, ஆசிரியா்கள் தமிழ்க்குமரன், முகமது ரபி, முகமது மாலிக் ஆகியோா் கலந்து கொண்டனா்.