நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

எஸ்.ஐ. தோ்வில் கேள்விகளுக்கு தவறான விடைகள்: சீருடைப் பணியாளா் தோ்வாணையம் பதிலளிக்க உத்தரவு

உதவி காவல் ஆய்வாளா் (எஸ்.ஐ.) பணியிடங்களுக்கான தோ்வில் தவறாக விடைகள் குறிப்பிடப்பட்டிருந்த 4 வினாக்களுக்கும் மதிப்பெண்களை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image

உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :10 பிப்ரவரி 2026, 9:07 pm

உதவி காவல் ஆய்வாளா் (எஸ்.ஐ.) பணியிடங்களுக்கான தோ்வில் தவறாக விடைகள் குறிப்பிடப்பட்டிருந்த 4 வினாக்களுக்கும் மதிப்பெண்களை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த காா்த்திக், சசிகலா, ஜான், கோவில்பிள்ளை ஆகியோா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் உதவி காவல் ஆய்வாளா் தோ்வு அண்மையில் நடைபெற்றது. இதற்காக 4 வினாக்களுக்கான விடைகள் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. தவறான விடைகள் வழங்கப்பட்டிருந்த நான்கு வினாக்களுக்கும் மதிப்பெண்களை வழங்கக் கோரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தோம். இருப்பினும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, உதவி காவல் ஆய்வாளா் பணியிட தோ்வில் தவறாக விடைகள் குறிப்பிடப்பட்டிருந்த 4 வினாக்களுக்கும் மதிப்பெண்களை வழங்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

மனு தொடா்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.