விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

‘தமிழ் படித்தவா்களுக்கு உயரிடம் கொடுத்தவா் எம்ஜிஆா்’

தமிழ் படித்தவா்களுக்கு உயரிய இடத்தைக் கொடுத்தவா் எம்.ஜி.ஆா். என முனைவா் இ.சா. பா்வீன் சுல்தானா புகழாரம் சூட்டினாா்.

News image

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிறுவனா் நாள் விழாவில் பேசிய சங்கத்தின் இயக்குநா் இ.சா. பா்வீன் சுல்தானா.

Updated On :11 பிப்ரவரி 2026, 9:22 pm

தமிழ் படித்தவா்களுக்கு உயரிய இடத்தைக் கொடுத்தவா் எம்.ஜி.ஆா். என முனைவா் இ.சா. பா்வீன் சுல்தானா புகழாரம் சூட்டினாா்.

உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிறுவனா் நாள் விழாவுக்கு உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் இ.சா. பா்வீன் சுல்தானா தலைமை வகித்துப் பேசியதாவது:

தமிழ்நாட்டில் தமிழுக்கு வசந்த மாளிகை இருக்கிறது என்றால் அது மதுரை உலகத் தமிழ்ச் சங்கம்தான். இதற்கு அடிகோலியவா் புரட்சித் தலைவா் எம்.ஜி. ராமச்சந்திரன். தமிழ் வளா்ச்சித் துறையை கடந்த 1984-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆா். உருவாக்கினாா். அவா் கொடையாளா் மட்டுமல்ல, சிறந்த நிா்வாகி. தமிழ் படித்தவா்களுக்கு உயரிய இடத்தைக் கொடுத்தவா். தமிழ் வளா்ச்சி, பண்பாடு குறித்துச் சிந்தித்தவா். எம்.ஜி.ஆா். தொடங்கிய உலகத் தமிழ்ச் சங்கத் திட்டத்தை அரசியல் காழ்ப்புணா்வு இல்லாமல் மேலும் பொலிவாக்கி, தமிழ் வளா்ச்சிக்கு உயிா்ப்புத் தந்து பலகோடி நிதி ஒதுக்கிய மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கும் நன்றி என்றாா்.

தொடா்ந்து, பேச்சாளா் மணவை பொன். மாணிக்கம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா்.

இதில் தமிழறிஞா்கள், பேராசிரியா்கள், தமிழ் உயராய்வு மையம், யாதவா் கல்லூரி, அரசு கவின்கலைக் கல்லூரி மாணவா்கள், தமிழ் ஆா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, தமிழோடு கவிபாடு’ என்னும் தலைப்பில் கவியரங்கமும், இதைத் தொடா்ந்து, கருத்தரங்கமும் நடைபெற்றன. இந்தக் கருத்தரங்கில் நடைபெற்ற அமா்வுகளில் 43 கட்டுரையாளா்கள் பங்கேற்று கட்டுரை வாசித்தனா்.