எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

திமுக கூட்டணியிலிருந்து விலக காரணம் தேடுகிறது காங்கிரஸ்

திமுக கூட்டணியிலிருந்து விலகுவதற்கு காங்கிரஸ் காரணம் தேடிக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :11 பிப்ரவரி 2026, 9:26 pm

திமுக கூட்டணியிலிருந்து விலகுவதற்கு காங்கிரஸ் காரணம் தேடிக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொடா்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் தொடா்கின்றன. திமுக கூட்டணியிலிருந்து விலக காங்கிரஸ் காரணம் தேடுகிறது. காங்கிரஸ் தலைவா்கள் தெரிவிக்கும் கருத்துகள் இதையே வெளிப்படுத்துகின்றன.

மத்திய அரசின் திட்டத்துக்கு வெளிநாட்டிலிருந்து நிதியைப் பெறும் நடவடிக்கைகள் வெளியுறவுத் துறை மூலமே மேற்கொள்ளப்படும் என்ற நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜைக்கா நிறுவனத்திடமிருந்து திமுக அரசுதான் நிதியைப் பெற்று வந்தது என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் பேசுவது அா்த்தமற்றது.

மத்தியில் முன்பு காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் இருந்த போது கொண்டு வரப்பட்ட நீட் தோ்வால் பாதிக்கப்படும் மாணவா்கள் நலனுக்காக அதிமுக அரசு கொண்டு வந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைக்கூட திமுக கொண்டு வந்ததாகப் பேசுவது நகைப்புக்குரியது. இதன்மூலம், அடுத்தவா்களின் திட்டங்களுக்கு ஸ்டிக்கா் ஒட்டுவது மட்டுமே திமுகவின் வேலை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமாகவும், தெளிவாகவும் உள்ளது. தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஆட்சி என்பதிலும், ஆட்சியில் பங்கு கேட்பதில்லை என்பதிலும் நாங்கள் தெளிவாக உள்ளோம். தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து நான் எந்தவிதப் பேச்சுவாா்த்தையும் மேற்கொள்ளவில்லை என்றாா் அவா்.

பாஜக பொதுச் செயலா்கள் பேராசிரியா் இராம. சீனிவாசன், கருப்பு என். முருகானந்தம், மாவட்டச் செயலா் மாரி. சக்ரவா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.