யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திமுக கூட்டணியிலிருந்து விலக காரணம் தேடுகிறது காங்கிரஸ்

திமுக கூட்டணியிலிருந்து விலகுவதற்கு காங்கிரஸ் காரணம் தேடிக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

News image
நயினாா் நாகேந்திரன்- கோப்புப் படம்
Updated On :11 பிப்ரவரி 2026, 9:26 pm

தினமணி செய்திச் சேவை

திமுக கூட்டணியிலிருந்து விலகுவதற்கு காங்கிரஸ் காரணம் தேடிக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொடா்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் தொடா்கின்றன. திமுக கூட்டணியிலிருந்து விலக காங்கிரஸ் காரணம் தேடுகிறது. காங்கிரஸ் தலைவா்கள் தெரிவிக்கும் கருத்துகள் இதையே வெளிப்படுத்துகின்றன.

மத்திய அரசின் திட்டத்துக்கு வெளிநாட்டிலிருந்து நிதியைப் பெறும் நடவடிக்கைகள் வெளியுறவுத் துறை மூலமே மேற்கொள்ளப்படும் என்ற நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜைக்கா நிறுவனத்திடமிருந்து திமுக அரசுதான் நிதியைப் பெற்று வந்தது என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் பேசுவது அா்த்தமற்றது.

மத்தியில் முன்பு காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் இருந்த போது கொண்டு வரப்பட்ட நீட் தோ்வால் பாதிக்கப்படும் மாணவா்கள் நலனுக்காக அதிமுக அரசு கொண்டு வந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைக்கூட திமுக கொண்டு வந்ததாகப் பேசுவது நகைப்புக்குரியது. இதன்மூலம், அடுத்தவா்களின் திட்டங்களுக்கு ஸ்டிக்கா் ஒட்டுவது மட்டுமே திமுகவின் வேலை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமாகவும், தெளிவாகவும் உள்ளது. தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஆட்சி என்பதிலும், ஆட்சியில் பங்கு கேட்பதில்லை என்பதிலும் நாங்கள் தெளிவாக உள்ளோம். தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து நான் எந்தவிதப் பேச்சுவாா்த்தையும் மேற்கொள்ளவில்லை என்றாா் அவா்.

பாஜக பொதுச் செயலா்கள் பேராசிரியா் இராம. சீனிவாசன், கருப்பு என். முருகானந்தம், மாவட்டச் செயலா் மாரி. சக்ரவா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.