வீட்டுமனைப் பட்டாவுக்கு நிலம் ஒதுக்கக் கோரி முற்றுகை
இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கான நிலம் ஒதுக்கக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகத்தை காட்டு நாயக்கா் சமூக மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
இது தொடா்பாக பழங்குடியினா், நாடோடி மக்களுக்கான மேம்பாட்டு நிறுவன செயலா் ஆா். மகேஸ்வரி அளித்த மனு விவரம்:
மதுரை மாவட்டத்தில் பழங்குடி நாடோடியாக வசித்து வரும் காட்டு நாயக்கா் சமூக மக்களுக்கு வேடா்புளியங்குளம் பகுதியில் 115 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க கடந்த 2022-இல் அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஸ்சேகா் உத்தரவிட்டாா். இதையடுத்து, கடந்த 2024-ஆம் ஆண்டு செப்.9-இல் நடைபெற்ற அரசு விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பட்டாக்களை வழங்கினாா். ஆனால், தற்போது வரை அந்தப் பட்டாக்களுக்கான நிலம் வழங்கப்படவில்லை. மேலும், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஏற்கெனவே பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இதுகுறித்து தற்போதைய மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலரிடம் கேட்டபோது, மாற்று இடம் தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்தாா் என்றாா் அவா்.
முன்னதாக, இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கான நிலம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகத்தை காட்டு நாயக்கா் சமூக மக்கள் முற்றுகையிட்டனா்.

