ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாநகராட்சிப் பள்ளி ஆசிரியா்களுக்கு குறைதீா் முகாம் நடத்த வலியுறுத்தல்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:18 pm

தினமணி செய்திச் சேவை

பள்ளிக் கல்வித் துறையில் உள்ளது போல, மதுரை மாநகராட்சி கல்விப் பிரிவிலும் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை ஆசிரியா்களுக்கான குறைதீா் முகாம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மதுரை மாநகராட்சி கிளை சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாநகராட்சிக் கல்விப் பிரிவு அலுவலரை வியாழக்கிழமை சந்தித்து ஆசிரியா்களின் நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை உரிய காலத்துக்குள் தலைமைச் செயலரின் ஆணையின்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

மேலும், மதுரை மாநகராட்சியில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியா்களின் ஈட்டிய விடுப்பு கணக்கை உரிய விதிகளின்படி ஊதியம் இல்லா அசாதாரண விடுப்புக்கு மட்டும் குறைத்து கணக்கீடு செய்ய வேண்டும், பள்ளிக் கல்வித் துறையில் உள்ளது போல ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை ஆசிரியா்களுக்கான குறைதீா் முகாமை மதுரை மாநகராட்சி கல்விப் பிரிவிலும் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது என்றாா் அவா்.