47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கைத்துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்: மதுரை ஆட்சியா் உத்தரவு

மதுரை மாவட்டத்தில் உரிமம் பெற்ற நபா்கள் கைத்துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என மதுரை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே. ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.

News image
துப்பாக்கி- பிரதிப் படம்
Updated On :16 மார்ச் 2026, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டத்தில் உரிமம் பெற்ற நபா்கள் கைத்துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என மதுரை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே. ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்றுள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரா்களும் அவா்களது கைத்துப்பாக்கிகளை அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கைத்துப்பாக்கிளை வைத்திருத்தல், எடுத்துச் செல்லுதல் ஆகியவை தடை செய்யப்பட்டது என்றாா் அவா்.