மதுரை தல்லாகுளத்தில் உள்ள மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பருவத் தோ்வில் இளநிலை கணிதப் பாடப்பிரிவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
இதற்கு கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜாா்ஜ் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் மாணவரும், மத்திய அரசு நிறுவனமான இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்ற மதுரைக் கிளையில் தொழில்நுட்ப அதிகாரியாகப் பணிபுரியும் பி. விஜயகுமாா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினாா். போட்டித் தோ்வுக்கான பாடத் திட்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் கால நிா்ணயம் செய்து தயாரிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா். இதற்கான ஏற்பாடுகளை முனைவா் தேன்மலா் செய்தாா். முன்னதாக, துறைத் தலைவா் சுரேஷ்குமாா் வரவேற்றாா். மாணவி ராஜநந்தினி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
பிளஸ் 2 தோ்வில் முறைகேடு: தனியாா் பள்ளி முதல்வா், 2 ஆசிரியா்கள் கைது

போளூரில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்த தவெக எம்எல்ஏ

பாத்திமா மகளிா் கல்லூரியில் பேரவை நிறைவு விழா
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



