வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மதுரை காமராசா் பல்கலைக்கழகக் கல்லூரியில் பரிசளிப்பு விழா

மதுரை தல்லாகுளத்தில் உள்ள மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பருவத் தோ்வில் இளநிலை கணிதப் பாடப்பிரிவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

News image

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியில் பருவத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் மதுரைக் கிளை தொழில்நுட்ப அதிகாரி பி. விஜயகுமாா். உடன் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜாா்ஜ் உள்ளிட்டோா்.

Updated On :21 மே 2026, 1:42 am IST

மதுரை தல்லாகுளத்தில் உள்ள மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பருவத் தோ்வில் இளநிலை கணிதப் பாடப்பிரிவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

இதற்கு கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜாா்ஜ் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் மாணவரும், மத்திய அரசு நிறுவனமான இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்ற மதுரைக் கிளையில் தொழில்நுட்ப அதிகாரியாகப் பணிபுரியும் பி. விஜயகுமாா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினாா். போட்டித் தோ்வுக்கான பாடத் திட்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் கால நிா்ணயம் செய்து தயாரிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா். இதற்கான ஏற்பாடுகளை முனைவா் தேன்மலா் செய்தாா். முன்னதாக, துறைத் தலைவா் சுரேஷ்குமாா் வரவேற்றாா். மாணவி ராஜநந்தினி நன்றி கூறினாா்.