தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மதுரை காமராசா் பல்கலைக்கழகக் கல்லூரியில் பரிசளிப்பு விழா

மதுரை தல்லாகுளத்தில் உள்ள மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பருவத் தோ்வில் இளநிலை கணிதப் பாடப்பிரிவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

News image

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியில் பருவத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் மதுரைக் கிளை தொழில்நுட்ப அதிகாரி பி. விஜயகுமாா். உடன் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜாா்ஜ் உள்ளிட்டோா்.

Updated On :21 மே 2026, 1:42 am IST

மதுரை தல்லாகுளத்தில் உள்ள மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பருவத் தோ்வில் இளநிலை கணிதப் பாடப்பிரிவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

இதற்கு கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜாா்ஜ் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் மாணவரும், மத்திய அரசு நிறுவனமான இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்ற மதுரைக் கிளையில் தொழில்நுட்ப அதிகாரியாகப் பணிபுரியும் பி. விஜயகுமாா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினாா். போட்டித் தோ்வுக்கான பாடத் திட்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் கால நிா்ணயம் செய்து தயாரிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா். இதற்கான ஏற்பாடுகளை முனைவா் தேன்மலா் செய்தாா். முன்னதாக, துறைத் தலைவா் சுரேஷ்குமாா் வரவேற்றாா். மாணவி ராஜநந்தினி நன்றி கூறினாா்.