சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள கல்லூர் ஊராட்சி நூலகம் பயன்பாட்டுக்கு வருமா?

திருவாடானை அருகே கல்லூர் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பாரதி நகரில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக திறக்கப்படாமல்

News image
Updated On :28 டிசம்பர் 2017, 7:40 pm

DIN

திருவாடானை அருகே கல்லூர் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பாரதி நகரில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள நூலகத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட ஊராட்சி முகமை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் படி பல லட்சம் ரூபாய் செலவில் 2010 ஆண்டு இந்த நூலகம் கட்டப்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நூற்றுக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. மேலும் இதன் அருகே பள்ளிகள், கல்லூரிகள். அரசு அலுவலகங்கள்ஆகியவை உள்ளன. மாணவர்கள் இந்த நூலகத்தை அதிகம் பயன்படுத்தி வந்த நிலையில் நூலகம் திடீரென மூடப்பட்டது. பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் நூலகம் எதிரே புதர்கள் மண்டி கிடக்கின்றன. எனவே இந்த நூல் நிலையத்தை திறந்து பொதுமக்கள் மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.