காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் கடையடைப்பு செய்ய திட்டமிட்டிருப்பதாக வர்த்தக சங்க தலைர் பா.ஜெகதீசன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோருதல், காவிரி நீரை தமிழகத்துக்கு தடையின்றி வழங்க வலியுறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை கடையடைப்பு செய்வது என நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வர்த்தகர்கள் கடையடைப்பு செய்ய இருப்பதால் பொதுமக்கள் இந்த சிரமத்தைப் பொறுத்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் காவேரி மேலாண்மை அமைப்பதில் காலம் தாழத்தி வரும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று (வியாழக்கிழமை ) ஒரு நாள் மட்டும் முழு கடை அடைப்பு நடத்துவதாக வர்த்தக சங்க தலைவர் எஸ்.முத்துராமலிங்கம் தகவல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூதாட்டி உயிரிழந்த வழக்கு: ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கடலூரில் தற்போதைய பேருந்து நிலையமே விரிவாக்கம் செய்யப்படும்: அமைச்சா் ப. ராஜ்குமாா்

மின்தடையால் கருகிய பயிா்கள்: விவசாயிகள் சாலை மறியல்

நெற்பயிரில் செம்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


