இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் ராமேசுவரம் வந்த துருக்கி நாட்டவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ராமேசுவரம் சேராங்கோட்டை மீனவ கிராமத்தில் சனிக்கிழமை சுற்றித்திரிந்த துருக்கி நாட்டை சேர்ந்த மகீர்தேவ்ரிமை (65) கடற்கரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் மத்திய, மாநில உளவுத்துறையினர், இந்திய கடற்படையினர் விசாரணை நடத்தினர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் ராமேசுவரம் வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது போலீஸார் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, திருவாடானை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மகீர்தேவ்ரிம்மை சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை போலீஸார் அவரை, சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

