ஒடிசாவில் இருந்து குஜராத் செல்லும் மிதவைக் கப்பல் செவ்வாய்க்கிழமை பாம்பன் பாலத்தைக் கடந்து சென்றது.
ஒடிசா மாநிலம் தாம்ரா துறைமுகத்தில் இருந்து குஜராத் மாநிலம் சிக்கா துறைமுகத்திற்கு இக்கப்பல் செல்கிறது. 70 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பல் கடந்த 15 -ஆம் தேதி பாம்பன் துறைமுகத்திற்கு வந்தது. பாம்பன் ரயில் பாலத்தைக் கடந்து செல்ல கப்பல் ஊழியர்கள் பாம்பன் துறைமுக அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இதனையடுத்து, பாம்பன் ரயில் பாலம் திறக்க ரயில்வே நிர்வாகத்திடம் துறைமுகம் சார்பில் மனு அளித்திருந்தனர். இதனை ஏற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாம்பன் ரயில் பாலம் திறக்க அனுமதி பெறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பாம்பன் தூக்குப் பாலம் திறக்கப்பட்டது. அதன் வழியாக குஜராத் மாநிலம் சிக்கா துறைமுகத்திற்கு கப்பல் சென்றது. பிரமாண்ட கப்பல் பாம்பன் பாலத்தை கடத்து சென்றதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை வெய்யில்: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்!

பணவீக்க நாயகனின் அதிரடி தொடருகிறது.. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

கார்த்தி - 30 பூஜை!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


