பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
/

கோடை வெய்யில்: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்!

பள்ளிகள் திறப்பு பற்றி அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி ...

News image

அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 12:30 pm IST

கோடை வெய்யில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறியிருந்தோம். கோடை வெய்யில் காரணமாக அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கைகள் வருகின்றன.

ஜூன் முதல் வாரம் கோடை வெய்யில் எப்படி இருக்கும், வெப்ப அலை இருக்குமா? என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் விவரங்கள் கேட்டுள்ளோம்.

வானிலை ஆய்வு மைய அதிகாரிகளின் தகவல் அடிப்படையில், முதல்வருடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

பள்ளிகளில் காலை மற்றும் மதிய உணவுத் திட்டம் தொடரும். குழந்தைகளைப் பாதிக்கும் எந்த விஷயங்களையும் செய்ய மாட்டோம். எந்தத் திட்டங்களும் நிறுத்தப்படாது. உணவின் தரத்தில் சமரசம் செய்ய மாட்டோம். இந்த திட்டங்களை மேலும் மேம்படுத்தி அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கும்படி செய்வோம்" என்கிறார்.

Summary

Summer heat wave: Will School Reopening Be Postponed, Minister Rajmohan Responds

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.