/
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி திங்கள்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்தார்.
ராமேசுவரத்துக்கு திங்கள்கிழமை இரவு வந்த அவர் கோயிலுக்குள் சென்று சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தார். மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், வருவாய் கோட்டாசியர் சுமன், காவல்துறை ஏ.டி.எஸ்.பி. கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். செவ்வாய்கிழமை காலை நீதிபதி இந்திரா பானர்ஜி ஸ்படிக லிங்க பூஜையின்போது தரிசனம் செய்ய உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








