தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கமுதி அருகேபாதியில் நிற்கும் அரசு நடுநிலைப் பள்ளி  சுற்றுச் சுவர் கட்டுமானப் பணி

கமுதி அருகே பாதியில் நிற்கும் அரசு நடுநிலைப் பள்ளியின் சுற்றுச் சுவர் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :21 மே 2018, 6:20 pm

கமுதி அருகே பாதியில் நிற்கும் அரசு நடுநிலைப் பள்ளியின் சுற்றுச் சுவர் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கமுதியை அடுத்த சின்னஉடப்பங்குளத்தில் கமுதி-மண்டலமாணிக்கம் சாலையோரம் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 60 மாணவர்கள் பயின்று வருகின்றனர். வகுப்பு நேரங்களில் பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழையும் கால்நடைகளால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனை தடுக்கும் வகையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், சுற்றுச் சுவர் அமைக்கும் பணி தொடங்கியது. இப்பணி அரைகுறையாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கால்நடைகள் பள்ளி வளாகத்துக்குள் நுழையும் சம்பவம் தொடர்கிறது.
மேலும், சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள், கட்டுப்பாட்டை இழந்தால், பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கோடை விடுமுறை முடிவதற்கு முன்பாகவே சுற்றுச் சுவர் பணியை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சின்ன உடப்பங்குளம் சமூக ஆர்வலர் வாசு கூறியதாவது: சின்ன உடப்பங்குளம் பள்ளியின் சுற்று சுவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கமுதி ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
இந்த நிதி, போதுமானதாக இல்லாததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் நிதி பற்றாக்குறை காரணத்தைக் காட்டி தட்டிக் கழிக்கின்றனர்.
அரசு பள்ளிகளின் தரம், சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை தமிழக அரசு கடுமையாக கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த பள்ளியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.