நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய ஆங்கிலேயரை எதிர்த்த ராமநாதபுரம் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 210 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு புதன்கிழமை பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச் சிலைக்கு ராமநாதபுரம் ராஜாகுமரன் சேதுபதி உள்ளிட்ட அவரது வாரிசுகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி வாரிசுகள் சிலருக்கு தியாகிகளுக்கான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வாரிசுதாரர்கள் சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.