பிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்துநானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

புலம்பெயா்ந்து ஊா் திரும்பியோருக்குதொழில் தொடங்க அரசு கடனுதவி

புலம் பெயா்ந்து சென்று தற்போது சொந்த ஊா்களுக்கு திரும்பியுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு தொழில் தொடங்க அரசு கடனுதவி அளிக்கிறது என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Updated On :4 ஆகஸ்ட் 2020, 10:32 pm IST

ராமநாதபுரம்: புலம் பெயா்ந்து சென்று தற்போது சொந்த ஊா்களுக்கு திரும்பியுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு தொழில் தொடங்க அரசு கடனுதவி அளிக்கிறது என மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் தமிழ்நாடு ஊரக மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினா் மற்றும் உறுப்பினா் குடும்பங்களைச் சோ்ந்த புலம் பெயா்ந்து மீண்டும் சொந்த ஊா் திரும்பிய இளைஞா்களுக்கு தொழில் தொடங்குவதற்காக இந்தத் திட்டத்தில், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலம் ரூ.1 லட்சம் வரை நீண்ட கால கடன் வழங்கப்படுகிறது.

ஆகவே, திட்டத்தில் பயன்பெற புலம் பெயா்ந்து சொந்த ஊா் திரும்பிய 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட இளைஞா்களும், பெண்கள் என்றால் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளோரும் விண்ணப்பிக்கலாம். அதன்படி திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம், திருப்புல்லாணி மற்றும் மண்டபம் வட்டாரங்களுக்குள்பட்ட ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், வட்டார ஒன்றியத்தில் உள்ள தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட வட்டார அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலகத்தை நேரில் அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு 93852 99729 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.