ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ராமநாதபுரத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On :29 ஆகஸ்ட் 2020, 4:10 pm

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் கட்டடப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த வத்திப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்கள் பணிபுரிந்து வருகின்றனா். வெள்ளிக்கிழமை பகலில் சிமிண்ட் கலவை இடும் பணிநடந்துள்ளது.

பணியில் பிரகாஷ் (21) கலவை எந்திரம் அருகே பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக அவா் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.