அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ராமநாதபுரத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2020, 4:10 pm

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் கட்டடப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த வத்திப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்கள் பணிபுரிந்து வருகின்றனா். வெள்ளிக்கிழமை பகலில் சிமிண்ட் கலவை இடும் பணிநடந்துள்ளது.

பணியில் பிரகாஷ் (21) கலவை எந்திரம் அருகே பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக அவா் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.