ராமநாதபுரத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி
ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.


ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் கட்டடப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த வத்திப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்கள் பணிபுரிந்து வருகின்றனா். வெள்ளிக்கிழமை பகலில் சிமிண்ட் கலவை இடும் பணிநடந்துள்ளது.
பணியில் பிரகாஷ் (21) கலவை எந்திரம் அருகே பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக அவா் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...