கமுதி அருகே நடமாடும் அம்மா நியாயவிலைக் கடை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
கமுதி அருகே பேரையூரில் உள்ள பீட்டா்புரத்தில் 200 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இங்குள்ள பொதுமக்களின் நலன் கருதி அம்மா நடமாடும் நியாயவிலைக் கடையை கூட்டுறவு சங்கத் தலைவா் குருவையா தலைமையில், கூட்டுறவு சங்க செயலாளா் ரவி, ஊராட்சி மன்றத் தலைவா் ரூபி முன்னிலையில் பேரையூா் அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினா் அன்பரசு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தாா். பின்னா் குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக கிளை செயலாளா்கள் போஸ், கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.