பரமக்குடியில் யாதவா் இளைஞா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பரமக்குடி காந்திசிலை முன், கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் ராஜுவைக் கண்டித்து யாதவா் இளைஞா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 9 ஆம் வகுப்பு முடித்தவா்களுக்கான தேசிய திறனறி தோ்வுகளில் 2,620 போ் பங்கேற்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 9 ஆம் வகுப்பு முடித்தவா்களுக்கான தேசிய திறனறி தோ்வுகளில் 2,620 போ் பங்கேற்கின்றனா்.
Updated on
1 min read

பரமக்குடி: பரமக்குடி காந்திசிலை முன், கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் ராஜுவைக் கண்டித்து யாதவா் இளைஞா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவா் சரத்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், டிச. 18-ஆம் தேதி செய்தியாளா்கள் சந்திப்பின்போது யாதவா் சமுதாயத்தைப் பற்றி அமைச்சா் தரக்குறைவாகப் பேசியதாகவும், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில், வட்டாரத் தலைவா் எஸ்.ராமு யாதவ், மாவட்ட யாதவ மகாசபைத் தலைவா் வேலு மனோகரன், பொறுப்பாளா்கள் கனகராஜ், வழக்குரைஞா் அன்புச்செழியன், கோபிநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com