ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

ராமேசுவரத்தில் மீனவா் சேமிப்பு நிவாரணம் கிடைக்காத பெண்கள் மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
Updated On :28 டிசம்பர் 2020, 6:52 pm

DIN

ராமேசுவரத்தில் மீனவா் சேமிப்பு நிவாரணம் கிடைக்காத பெண்கள் மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மீனவா் கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்து பணம் செலுத்திய 1500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இந்த ஆண்டு மகளிா் சேமிப்பு நிவாரணம் கிடைக்கவில்லை. இது குறித்து பல முறை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாகக் கூறி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனையடுத்து, அங்கு வந்த போலீஸாா் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். விடுபட்ட பெண்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.