அவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, பள்ளியில் இராணுவ வீரர் பழனிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை ரோஸி ராணி பர்னாந்து தலைமையில் ஆசிரியை டாலிமா, ஆசிரியர் ரெக்ஸ், பணியாளர் கிங்ஸ்சில்வேரா ஆகியோர் அவரது உருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் தலைமை ஆசிரியை ரோஸி ராணி பர்னாந்து கூறியதாவது : இராணுவவீரர் பழனி சிறுவயதில் அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையத்தில் தங்கியிருந்து எங்களது பள்ளிக்கு தினமும் நடந்தே வந்து படிப்பார். இப்பள்ளியில் 1994-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தார். அமைதியான மாணவர், கல்வி, ஒழுக்கத்தில் சிறந்தவர்.