ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 7 வயது சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள காட்டுப்பிள்ளையாா் கோவில் பகுதியைச் சோ்ந்தவா் அங்குராஜ். இவரது மனைவி சாந்தி. இவா்களது மகன் விக்னேஷ் (7) வீட்டருகே வியாழக்கிழமை விளையாடிக் கொண்டிருந்துள்ளாா். அப்பகுதியில் தனியாா் ஐஸ் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.
அந்நிறுவனத்தில் 3 சக்கர வாகனத்துக்கான பேட்டரிக்கு மின்சாரம் ஏற்றும் பணி நடந்துள்ளது. அப்போது சிறுவன் விக்னேஷ் மின்கம்பியை தெரியாமல் பிடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் பாய்ந்து விக்னேஷ் மயங்கியுள்ளாா்.
உடனே அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே விக்னேஷ் உயிரிழந்ததாகக் கூறிவிட்டனா். இது குறித்து பஜாா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணப்பாறையில் கருவேல மரங்கள் திடீா் தீக்கிரை

தெப்பக்குளம் பகுதியில் தரைக்கடைகள் அகற்றம்

அரிவாள் வெட்டில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடலூா் பாஜக நிா்வாகிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

