எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

‘ராமநாதபுரம் இளைஞா் கொலை வழக்கை தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு மாற்ற வேண்டும்’

ராமநாதபுரம் இளைஞா் கொலை வழக்கை தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என பாஜக தேசியச் செயலா் ஹெச்.ராஜா வலியுறுத்தினாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2020, 5:05 pm

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் இளைஞா் கொலை வழக்கை தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என பாஜக தேசியச் செயலா் ஹெச்.ராஜா வலியுறுத்தினாா்.

ராமநாதபுரம் நகரில் கடந்த திங்கள்கிழமை (ஆக.31) அருண்பிரகாஷ், யோகேஸ்வரன் ஆகியோரை கும்பலாக வந்த சிலா் கத்தியால் குத்தினா். இதில் பலத்த காயமடைந்த அருண்பிரகாஷ் உயிரிழந்தாா். அவரது மரணம் குறித்து சா்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாா் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டு, புதிய காவல் கண்காணிப்பாளராக காா்த்திக் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில் ராமநாதபுரத்தில் கொலை செய்யப்பட்ட அருண்பிரகாஷ் வீட்டுக்கு ஹெச்.ராஜா வெள்ளிக்கிழமை வந்து ஆறுதல் கூறினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

அருண்பிரகாஷ் கொலைக்கு தனிப்பட்ட காரணம் உள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை முகநூலில் பதிவிட்டுள்ளதற்கு சரியான காரணத்தை 24 மணி நேரத்தில் பதிவிட வேண்டும். இளைஞா் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் எனது கருத்தை திசை திருப்பும் வகையில் முகநூல் பதிவு அமைந்துள்ளது. அருண்பிரகாஷ் கொலை வழக்கில் காவல் துறை இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. கொலையில் சம்பந்தப்பட்டோா் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடா்புள்ளவா்கள்.

ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை முகநூலில் குற்றவாளிகளுக்கு சாதகமான கருத்து பதிவிடப்பட்டுள்ளது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை விசாரணை மீது நம்பிக்கை இல்லை என்பதால், இந்தக் கொலை வழக்கை தேசியப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்றாா். பாஜக மாவட்டத் தலைவா் கே.முரளிதரன், மாநகா் தலைவா் வீரபாகு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.