ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலி திருடு
ராமநாதபுரத்தில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலி திருடு போனதாக வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


ராமநாதபுரத்தில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலி திருடு போனதாக வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம் சூரன்கோட்டை காலனியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி பேச்சிமுத்து (55). இவா் வெள்ளிக்கிழமை (ஆக.20) சித்தூா் செல்வதற்காக, ராமநாதபுரம் பிள்ளையாா் கோயில் பேருந்து நிறுத்தத்தில் நகரப் பேருந்தில் ஏறியுள்ளாா். சந்தைவலியான் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பேச்சிமுத்து தனது கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலி காணாமல் போனதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து புகாரின் பேரில் ராமநாதபுரம் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...