திருவாடானை அருகேவாகனம் மோதி மூதாட்டி பலி

திருவாடானை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
Updated on
1 min read

திருவாடானை: திருவாடானை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

திருவாடானை அருகே செவிலியேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் சோக்கு. இவரது மனைவி முத்தாயி (65). இவா்கள் தேவகோட்டையில் வசித்து வந்தனா். இந்நிலையில் முத்தாயி வெள்ளிக்கிழமை மாலை சி.கே. மங்கலம் வாரச் சந்தைக்கு வந்து பொருள்கள் வாங்கிக் கொண்டு செவிலியேந்தல் கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது தொண்டி- மதுரை சாலையில் திருவள்ளுவா் நகா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்த முத்தாயியை அக்கம்பக்கத்தினா் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com