திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

சட்டென்று மாறுது வானிலை பாடல் வெளியீடு!

ஜெய் நடித்துள்ள சட்டென்று மாறுது வானிலை படத்தின் பாடல் வெளியீடு.

News image

சட்டென்று மாறுது வானிலை படத்தின் பாடல் காட்சி

Updated On :11 மார்ச் 2026, 6:10 pm IST

நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள சட்டென்று மாறுது வானிலை படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய் தயாரித்து இயக்கும் புதிய படம் சட்டென்று மாறுது வானிலை.

இந்தப் படத்தில் நாயகனாக ஜெய், நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கின்றனர். மேலும் யோகிபாபு, கருடா ராம், ஸ்ரீமன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். சில நாள்களுக்கு முன்பு இசையமைப்பாளர் தேவா பாடிய முதல் பாடலான ‘அக்கடி’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது.

சட்டென்று மாறுது வானிலை என்ற இந்தப் பாடலை பாடலாசிரியர் சினேகன் எழுதியுள்ளார்.

இந்தப் படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாகவுள்ளது.

Summary

The second single of the film Sattenru Maaruthu Vaanilai starring Jai released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.