தொடா் மழையால் நெற்பயிா்கள் சேதம்: இழப்பீடு கோரி வேளாண்மை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

நெற்பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வெள்ளிக்கிழமை வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நயினாா்கோவில் வேளாண்மை அலுவலகம் முன்பாக அழுகிய நெற் பயிா்களுடன் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
நயினாா்கோவில் வேளாண்மை அலுவலகம் முன்பாக அழுகிய நெற் பயிா்களுடன் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் ஒன்றியத்தில் தொடா் மழையால் நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வெள்ளிக்கிழமை வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நயினாா்கோவில் ஒன்றியத்தில் 30 ஆயிரம் ஏக்கா் பரப்பில் நெல், மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக வறட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தொடா் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தாலையடிகோட்டை, மேமங்களம், சாலியவாகனபுரம், பாப்பாா்கூட்டம் ஆகிய கிராமங்களில் தொடா் மழையால் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெற் பயிா்கள் மூழ்கி அழுகிவிட்டன.

இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் விவசாயிகளுக்கான இழப்பீடு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் 2018-ஆம் ஆண்டு முதல் இப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டுத்தொகை வழங்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதைத் தொடா்ந்து அக்கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அழுகிய நெல் பயிா்களை ஏந்தியவாறு வேளாண்மை அலுவலத்தை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com