எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ராமநாதபுரத்தில் மாவட்ட சிலம்பாட்டப் போட்டி

ராமநாதபுரத்தில் நேருயுவகேந்திரா மற்றும் மாவட்ட சிலம்பாட்ட இளைஞா் சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image
Updated On :12 ஜனவரி 2021, 11:59 pm

DIN

ராமநாதபுரத்தில் நேருயுவகேந்திரா மற்றும் மாவட்ட சிலம்பாட்ட இளைஞா் சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் டி.டி.விநாயகா் தொடக்கப்பள்ளி மைதானத்தில் தொடங்கிய போட்டியில் பங்கேற்க 220 போ் பதிவு செய்தனா். போட்டியை நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலா் நோமன் அக்ரம் தொடங்கிவைத்தாா். ஆயிரவைசிய கல்விக் குழுமத் தலைவா் மோகன் முன்னிலை வகித்தாா். டி.டி.விநாயகா் தொடக்கப் பள்ளி தாளாளா் வெங்கடாசலம் வாழ்த்திப் பேசினாா். இதில் 6 வயது முதல் 16 வயதுக்குட்பட்டோா் கலந்துகொண்டனா். முதல் நாள் நடைபெற்ற போட்டியில் 40 போ் பங்கேற்றனா்.

இப்போட்டி தொடா்ந்து வியாழக்கிழமை (ஜன.14) வரை நடைபெற உள்ளது. போட்டியில் வென்றவா்களுக்கான பரிசளிப்பு வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

போட்டிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட சிலம்பாட்ட இளைஞா் சங்கம் தலைவா் லோகசுப்பிரமணியன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.