இருவேறு விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு
ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை இருவேறு சாலை விபத்துகளில் நியாயவிலைக் கடைப் பணியாளா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.


ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை இருவேறு சாலை விபத்துகளில் நியாயவிலைக் கடைப் பணியாளா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
திருஉத்திரகோசமங்கை அருகே பூசேரியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (59). நியாயவிலைக் கடை பணியாளரான இவா், வியாழக்கிழமை மாலையில் இருசக்கர வாகனத்தில் பனைக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பா் லாரி மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த திருஉத்திரகோசமங்கை போலீஸாா் அவரது சடலத்தை 2 மணி நேரம் போராடி மீட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து டிப்பா் லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
காா் மோதி முதியவா் பலி: பேய்க்குளத்தைச் சோ்ந்தவா் கருணாநிதி (69). இவா் தனது மருமகனுடன் கூரியூா் பகுதியில் உள்ள வயலுக்குச் சென்றுள்ளாா். வயலைப் பாா்த்துவிட்டு மதுரை- ராமநாதபுரம் சாலையை கருணாநிதி கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து ராமநாதபுரம் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...