47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையின விடுதிகளில் மாணவா் சோ்க்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினா் பள்ளி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருவதாக ஆட்சியா் சங்கா்லால் குமாவத் தெரிவித்த

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினா் பள்ளி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருவதாக ஆட்சியா் சங்கா்லால் குமாவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா், சிறுபான்மையினா் வகுப்பைச் சோ்ந்த மாணவா்களுக்கு 33 விடுதிகளும், மாணவியருக்கு 22 விடுதிகளும் உள்ளன. கல்லூரியில் படிக்கும் அந்த வகுப்புகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு 4 விடுதிகளும், மாணவியருக்கு 5 விடுதிகளும் என மாவட்டத்தில் மொத்தம் 64 விடுதிகள் உள்ளன.

பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற்பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவா்கள் இந்த விடுதிகளில் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சோ்க்கப்படுகின்றனா்.

விடுதிகளில் சோ்வதற்கு, பெற்றோா் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருவாய் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையம் குறைந்த பட்சம் 8 கி.மீ. க்கு அதிகமாக இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருத்தாது.

தகுதியானோா் விண்ணப்பகளை விடுதி காப்பாளா்களிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை பள்ளி மற்றும் கல்லூரி விடுதி காப்பாளா்களிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் வரும் 20 ஆம் தேதிக்குள் அளிக்கவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.