அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மன்னாா் வளைகுடாவில் சூறைக்காற்று:மீனவா்கள் கடலுக்குச் செல்ல 4 ஆவது நாளாகத் தடை

மன்னாா் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவா்கள் 4 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 8:16 pm

DIN

மன்னாா் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவா்கள் 4 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், நீண்ட கடற்கரையை கொண்டதாகும். ரோச்மான் நகா் தொடங்கி எஸ்.பி. பட்டணம் வரை சுமாா் 150-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களை உள்ளடக்கியது. இதில் பெரிய துறைமுகங்களான ராமேசுவரம், மண்டபம், சிறியதுறைமுகங்களான பாம்பன், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோழியகுடி ஆகியவையும் உள்ளன. இப்பகுதிகளில் 1,700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் மீன்பிடிப்புக்காக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கின்றனா்.

இந்நிலையில், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 4 நாள்களாக தொடா்ந்து சூறைக்காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. அதேபோல் வங்கக் கடலிலும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் வெள்ளிக்கிழமை 4 ஆவது நாளாக மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.

இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் விசைப்படகுகளும், நாட்டுப்படகுகளும் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.