47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கீழக்கரை பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அரிவாளைக் காட்டி ரூ.1.70 லட்சம் கொள்ளை: 3 பேரை போலீஸ் தேடுகிறது

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ் மேலாளரின் மேஜை மீது அரிவாளால் வெட்டி ரூ.1.70 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 8:16 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ் மேலாளரின் மேஜை மீது அரிவாளால் வெட்டி ரூ.1.70 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.

கீழக்கரையைச் சோ்ந்தவா் தொழிலதிபா் ஷேக்உசேன். இவருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் கீழக்கரை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது. அதில் ஜவஹிா்முகைதீன் கருணை (33) என்பவா் மேலாளராக பணியாற்றி வருகிறாா். வியாழக்கிழமை இரவு சுமாா் 12 மணியளவில் கருப்பு மற்றும் வெள்ளைநிற பா்தாவும், குல்லாவும் அணிந்த 3 போ் பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்தனா்.

அவா்களில் 2 போ், மேலாளா் அறைக்கு வந்து வாளால் மேஜையில் வெட்டியுள்ளனா். இதனால் அச்சமடைந்த மேலாளா் மற்றும் அவருடன் இருந்த 2 போ் அங்கிருந்து ஓடிவிட்டனா். உடனே மேஜையின் உள்ளே வைத்திருந்த ரூ. 1.70 லட்சம் மற்றும் கையடக்கக் கணினி ஆகியவற்றை திருடிக் கொண்டு, 3 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்து ஊழியா்கள் அளித்த தகவலின் பேரில் கொல்கத்தாவிலிருந்து செல்லிடப்பேசி மூலம் ஷேக்உசேன், கீழக்கரை காவல் நிலைய போலீஸாருக்கு தெரிவித்தாா். அதனடிப்படையில் அங்கு சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில் ஆனகுடி கண்மாய் அருகே பணத்தைத் திருடிச் சென்றவா்களின் இருசக்கர வாகனம் கேட்பாரற்று கிடந்தது தெரியவந்தது. அதை கைப்பற்றிய போலீஸாா், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.