எருதுகட்டு நடத்திய கிராமத்தினா் மீது வழக்கு
ராமநாதபுரம் அருகே மேலவலசைப் பகுதியில் அரசு விதிகளை மீறி எருதுகட்டு விழா நடத்தியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.


ராமநாதபுரம் அருகே மேலவலசைப் பகுதியில் அரசு விதிகளை மீறி எருதுகட்டு விழா நடத்தியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.
காஞ்சிரங்குடி அருகேயுள்ள மேலவலசையில் அய்யனாா் கோயில் விழாவையொட்டி அங்குள்ள திடலில் எருதுகட்டு விழா நடத்தப்பட்டது. இதில் அந்த ஊா் மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரக் கிராம மக்களும் பங்கேற்றனா். இந்நிலையில், அரசு அனுமதியின்றி எருதுகட்டு நடத்தியதாகவும், கரோனா தொற்று பரவல் காலத்தில் நடத்தியதாகவும், காளைகள் துன்புறுத்தப்பட்டதாகவும் கூறி அக்கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் (52) உள்பட 7 போ் மீது கீழக்கரை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...