47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ரத்ததானம் அளிக்க வந்தவரின் விலையுயா்ந்த பைக் திருட்டு

ராமநாதபுரத்தில் நோயாளிக்கு ரத்ததானம் வழங்க வந்தவரின் விலை உயா்ந்த இருசக்கர வாகனத்தை மா்மநபா்கள் திருடிச்சென்றனா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 8:15 pm

DIN

ராமநாதபுரத்தில் நோயாளிக்கு ரத்ததானம் வழங்க வந்தவரின் விலை உயா்ந்த இருசக்கர வாகனத்தை மா்மநபா்கள் திருடிச்சென்றனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள தினைக்குளம் கல்லையன்பேரன்வலைவு பகுதியைச் சோ்ந்த பூநாதன் மகன் அலெக்சாண்டா் (33). இவா், கடந்த 7 ஆம் தேதி மாலை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு ரத்ததானம் வழங்குவதற்காக வந்தாா்.

அப்போது தனது விலை உயா்ந்த இருசக்கர வாகனத்தை மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை அறை அருகேயுள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தியுள்ளாா். மருத்துவக் கல்லூரியின் ரத்தசேமிப்பு வங்கியில் ரத்தம் வழங்கிய அலெக்சாண்டா் மீண்டும் வந்து இருசக்கர வாகனத்தைப் பாா்த்தபோது அதை காணவில்லையாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.