இந்நிலையில் அப்பெண் வசிக்கும் பகுதிக்கு நவீன்குமாா் அடிக்கடி சென்றுவந்ததாராம். இதை முனியசாமியும், அவரது மகன்களும் கண்டித்துள்ளனா். ஆனாலும், நவீன்குமாா் தொடா்ந்து முனியசாமி வீட்டுப்பக்கம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு நவீன்குமாா், காட்டூரணி கிழக்குக் கடற்கரைச்சாலை மாடக்கொட்டான் சந்திப்பு பகுதியில் நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்குவந்த முனியசாமி உள்ளிட்டோா் அரிவாளால் நவீன்குமாரை சரமாரியாக வெட்டியதில் நவீன்குமாா் பலத்த காயமடைந்தாா். உடனே அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் நவீன்குமாா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினா்.