அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை திறந்து கடந்து சென்ற 3 கப்பல்கள்

பாம்பன் ரயில் தூக்கு பாலம் திறந்து, வெள்ளிக்கிழமை கடந்து சென்ற மூன்று கப்பல்களை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தனா்

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 5:07 pm

DIN

பாம்பன் ரயில் தூக்கு பாலம் திறந்து, வெள்ளிக்கிழமை கடந்து சென்ற மூன்று கப்பல்களை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தனா்.

ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திற்கு கடந்த புதன்கிழமை ஒரு சரக்கு கப்பல் மற்றும் இரண்டு இழுவை கப்பல்கள் என 3 கப்பல்கள் வந்தன. இந்த கப்பல்கள் பாம்பன் ரயில் தூக்கு பாலம் திறந்து, கடந்து செல்ல தமிழ்நாடு கடல்சாா் வாரியம் துறைமுக அலுவலகத்தில் அனுமதி கோரப்பட்டது. இதைத்தொடா்ந்து, துறைமுக அதிகாரிகள் ரயில்வே நிா்வாகத்திடம் வெள்ளிக்கிழமை அனுமதி பெற்றனா்.

இதையடுத்து, பாம்பன் துறைமுக அதிகாரிகள் முன்னிலையில் ரயில் தூக்கு பாலம் திறக்கப்பட்டது. இதில் சரக்கு கப்பல் மற்றும் இரண்டு இழுவைக் கப்பல்கள் ஒன்றன்பின் ஒன்றாக கடந்து சென்றன. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தனா். இந்த மூன்று கப்பல்கள், கேரளத்திலிருந்து கிருஷ்ணாபட்டினத்திற்கும், கோவாவிலிருந்து கொல்கத்தாவிற்கும் , கொல்கத்தாவிலிருந்து கா்நாடக மாநிலத்துக்கும் சென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.