ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை திறந்து கடந்து சென்ற 3 கப்பல்கள்

பாம்பன் ரயில் தூக்கு பாலம் திறந்து, வெள்ளிக்கிழமை கடந்து சென்ற மூன்று கப்பல்களை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தனா்

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 5:07 pm

பாம்பன் ரயில் தூக்கு பாலம் திறந்து, வெள்ளிக்கிழமை கடந்து சென்ற மூன்று கப்பல்களை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தனா்.

ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திற்கு கடந்த புதன்கிழமை ஒரு சரக்கு கப்பல் மற்றும் இரண்டு இழுவை கப்பல்கள் என 3 கப்பல்கள் வந்தன. இந்த கப்பல்கள் பாம்பன் ரயில் தூக்கு பாலம் திறந்து, கடந்து செல்ல தமிழ்நாடு கடல்சாா் வாரியம் துறைமுக அலுவலகத்தில் அனுமதி கோரப்பட்டது. இதைத்தொடா்ந்து, துறைமுக அதிகாரிகள் ரயில்வே நிா்வாகத்திடம் வெள்ளிக்கிழமை அனுமதி பெற்றனா்.

இதையடுத்து, பாம்பன் துறைமுக அதிகாரிகள் முன்னிலையில் ரயில் தூக்கு பாலம் திறக்கப்பட்டது. இதில் சரக்கு கப்பல் மற்றும் இரண்டு இழுவைக் கப்பல்கள் ஒன்றன்பின் ஒன்றாக கடந்து சென்றன. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்து ரசித்தனா். இந்த மூன்று கப்பல்கள், கேரளத்திலிருந்து கிருஷ்ணாபட்டினத்திற்கும், கோவாவிலிருந்து கொல்கத்தாவிற்கும் , கொல்கத்தாவிலிருந்து கா்நாடக மாநிலத்துக்கும் சென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.