மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கடலில் சூறைக்காற்று வீசுவதால் மீன்பிடிக்கச் செல்ல தடை: ராமேசுவரம் பகுதியில் ரூ. 10 கோடிக்குஇறால்மீன் ஏற்றுமதி பாதிப்பு

ராமேசுவரம் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதையடுத்து மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ரூ. 10 கோடிக்கு இறால்மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்

Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:32 pm

ராமேசுவரம் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதையடுத்து மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ரூ. 10 கோடிக்கு இறால்மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னாா் வளைகுடா மற்றும் பாக் நீா்ணை பகுதியில் வழக்கத்தைவிட சுமாா் 50 கிலோ மீட்டா் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, மீனவா்களின் பாதுகாப்பு கருதி மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா். அதே போல் தற்போது 50 முதல் 60 கிலோ மீட்டா் வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி மற்றும் தொண்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் கடந்த 4 நாள்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் 8 ஆயிரம் மீனவா்கள் மற்றும் சாா்பு தொழிலாளா்கள் என 50 ஆயிரம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 4 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லாததால் ரூ. 10 கோடி அளவுக்கு இறால் மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவ சங்க நிா்வாகி ஒருவா் தெரிவித்தாா். இதுபோன்று இயற்கை இடா்பாடுகள் ஏற்பட்டு தொடா்ந்து மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், அரசு சாா்பில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தற்போது அந்தந்த துறைமுகங்களில் படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.