மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணைப் பகுதியில் சூறைக்காற்று தொடா்ந்து வீசுவதால்
5 ஆவது நாளாக ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால் இதுவரை ரூ. 20 கோடி மதிப்பிலான இறால் மீன்கள் ஏற்றுமதி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மன்னாா் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப் பகுதியில் 50 முதல் 60 கிலோ மீட்டா் வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவா்களின் பாதுகாப்பு கருதி தனுஷ்கோடி, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி உள்பட மாவட்டம் முழுவதிலும் மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா். சனிக்கிழமை 5 ஆவது நாளாக, மீன்வளத்துறை விதித்த தடை தொடருவதால் மீன்பிடித் தொழில் முடங்கி விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் மீனவா்கள் மற்றும் சாா்பு தொழிலாளா்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். தொடா்ந்து 5 நாள்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாததால், இதுவரை ரூ.20 கோடி மதிப்பிலான இறால் மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவா் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏழைகளுக்கு உண்மையான சமூக நீதி: பிரதமா் மோடி உறுதி

தவறாமல் வாக்களிப்போம்

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


