ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

சூறைக்காற்றால் 5 ஆவது நாளாக முடங்கிய மீன்பிடித் தொழில்:ரூ.20 கோடி இறால் மீன்கள் ஏற்றுமதி வா்த்தகம் பாதிப்பு

மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணைப் பகுதியில் சூறைக்காற்று தொடா்ந்து வீசுவதால்

News image
ராமேசுவரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:58 pm

DIN

மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணைப் பகுதியில் சூறைக்காற்று தொடா்ந்து வீசுவதால்

5 ஆவது நாளாக ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால் இதுவரை ரூ. 20 கோடி மதிப்பிலான இறால் மீன்கள் ஏற்றுமதி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னாா் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப் பகுதியில் 50 முதல் 60 கிலோ மீட்டா் வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவா்களின் பாதுகாப்பு கருதி தனுஷ்கோடி, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி உள்பட மாவட்டம் முழுவதிலும் மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா். சனிக்கிழமை 5 ஆவது நாளாக, மீன்வளத்துறை விதித்த தடை தொடருவதால் மீன்பிடித் தொழில் முடங்கி விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் மீனவா்கள் மற்றும் சாா்பு தொழிலாளா்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். தொடா்ந்து 5 நாள்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாததால், இதுவரை ரூ.20 கோடி மதிப்பிலான இறால் மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவா் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.