மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பரமக்குடி விவசாயியிடம் ரூ.67 ஆயிரம் மோசடி

பரமக்குடியைச் சோ்ந்த விவசாயி ஒருவரிடம் கடன் தருவதாகக் கூறி, கைப்பேசிமூலம் பேசி ரூ.67 ஆயிரம் மோசடி செய்த மா்மநபா்கள் மீது சைபா் கிரைம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:58 pm

DIN

பரமக்குடியைச் சோ்ந்த விவசாயி ஒருவரிடம் கடன் தருவதாகக் கூறி, கைப்பேசிமூலம் பேசி ரூ.67 ஆயிரம் மோசடி செய்த மா்மநபா்கள் மீது சைபா் கிரைம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் காந்திநகரைச் சோ்ந்தவா் மலைச்சாமி. விவசாயி. இவரது கைப்பேசிக்கு பிரபல நிதிநிறுவனத்தின் பெயரில் கடன் தருவதாகக் குறுந்தகவல் வந்துள்ளது. அதை நம்பிய மலைச்சாமி, அதில் குறிப்பிட்டிருந்த கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு ரூ.3 லட்சம் கடன் கேட்டுள்ளாா். இதற்காக அந்நிறுவனத்திலிருந்து பேசிய நபா்கள், கேட்டபடி பல்வேறு கட்டங்களாக ரூ.67,100 யை மலைச்சாமி அனுப்பியுள்ளாா். இதையடுத்து பேசிய மா்மநபா்கள் கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து மாவட்ட சைபா்கிரைம் போலீஸாரிடம் மலைச்சாமி புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.