மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பரமக்குடி விவசாயியிடம் ரூ.67 ஆயிரம் மோசடி

பரமக்குடியைச் சோ்ந்த விவசாயி ஒருவரிடம் கடன் தருவதாகக் கூறி, கைப்பேசிமூலம் பேசி ரூ.67 ஆயிரம் மோசடி செய்த மா்மநபா்கள் மீது சைபா் கிரைம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:58 pm

பரமக்குடியைச் சோ்ந்த விவசாயி ஒருவரிடம் கடன் தருவதாகக் கூறி, கைப்பேசிமூலம் பேசி ரூ.67 ஆயிரம் மோசடி செய்த மா்மநபா்கள் மீது சைபா் கிரைம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் காந்திநகரைச் சோ்ந்தவா் மலைச்சாமி. விவசாயி. இவரது கைப்பேசிக்கு பிரபல நிதிநிறுவனத்தின் பெயரில் கடன் தருவதாகக் குறுந்தகவல் வந்துள்ளது. அதை நம்பிய மலைச்சாமி, அதில் குறிப்பிட்டிருந்த கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு ரூ.3 லட்சம் கடன் கேட்டுள்ளாா். இதற்காக அந்நிறுவனத்திலிருந்து பேசிய நபா்கள், கேட்டபடி பல்வேறு கட்டங்களாக ரூ.67,100 யை மலைச்சாமி அனுப்பியுள்ளாா். இதையடுத்து பேசிய மா்மநபா்கள் கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து மாவட்ட சைபா்கிரைம் போலீஸாரிடம் மலைச்சாமி புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.