நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சூறைக்காற்றால் 5 ஆவது நாளாக முடங்கிய மீன்பிடித் தொழில்:ரூ.20 கோடி இறால் மீன்கள் ஏற்றுமதி வா்த்தகம் பாதிப்பு

மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணைப் பகுதியில் சூறைக்காற்று தொடா்ந்து வீசுவதால்

News image

ராமேசுவரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:58 pm

மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணைப் பகுதியில் சூறைக்காற்று தொடா்ந்து வீசுவதால்

5 ஆவது நாளாக ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால் இதுவரை ரூ. 20 கோடி மதிப்பிலான இறால் மீன்கள் ஏற்றுமதி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னாா் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப் பகுதியில் 50 முதல் 60 கிலோ மீட்டா் வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவா்களின் பாதுகாப்பு கருதி தனுஷ்கோடி, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி உள்பட மாவட்டம் முழுவதிலும் மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா். சனிக்கிழமை 5 ஆவது நாளாக, மீன்வளத்துறை விதித்த தடை தொடருவதால் மீன்பிடித் தொழில் முடங்கி விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் மீனவா்கள் மற்றும் சாா்பு தொழிலாளா்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். தொடா்ந்து 5 நாள்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாததால், இதுவரை ரூ.20 கோடி மதிப்பிலான இறால் மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவா் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.