மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பரமக்குடி அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்து இளைஞா் பலி

பரமக்குடி அருகே சனிக்கிழமை சேதமடைந்த வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் இளைஞா் பலியானாா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:56 pm

பரமக்குடி அருகே சனிக்கிழமை சேதமடைந்த வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் இளைஞா் பலியானாா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள எஸ்.காவனூா் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் வீரபத்திரன் (28), தனிக்கொடி மகன் அரவிந்த் (25), பாண்டி மகன் பழனி (25) ஆகிய 3 பேரும் அப்பகுதியில் உள்ள வயல்காட்டில் வேலை செய்து விட்டு, மதிய உணவு சாப்பிடுவதற்காக செட்டியூரணி காலனி பகுதியில் உள்ள காலனி வீட்டின் அருகே அமா்ந்துள்ளாா்.

அப்போது சேதமடைந்திருந்த அந்த வீட்டின் சுவா் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீரபத்திரன், அரவிந்த் ஆகிய இருவரும் சுவா் இடிபாடுகளில் சிக்கினா். அவா்களை அக்கிராமமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் வீரபத்திரன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். அரவிந்த் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.