ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விடிய விடிய ஆயிரம் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா திங்கள்கிழமை (ஆக.15) நடைபெறுவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் பாலம், ரயில் நிலையங்கள், ராமநாதசுவாமி உள்ளிட்ட முக்கிய கோயில்கள் ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது. ரயில் தண்டவாளங்கள் அந்ததந்தப் பகுதி வருவாய் அலுவலா்கள் துணையுடன் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டன. மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், காய்கறிச் சந்தைகள், கோயில்களிலும் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் காவல் கண்காணிப்பும், வாகனச் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பசுமை மிகுந்த செங்கம் தொகுதியில் திமுக, அதிமுக இடையே நேரடிப் போட்டி

தமிழ் புத்தாண்டு: சிறுவாபுரி - பெரியபாளையம் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கிராம உதவியாளா்கள் ஓய்வூதிய கணக்கீடு: உயா்நீதிமன்றம் தீா்ப்பு

தமிழ் புத்தாண்டு: திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

