மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சுதந்திர தின விழா: ராமநாதபுரத்தில் ஆயிரம் போலீஸாா் கண்காணிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விடிய விடிய ஆயிரம் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 10:30 pm

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விடிய விடிய ஆயிரம் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா திங்கள்கிழமை (ஆக.15) நடைபெறுவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் பாலம், ரயில் நிலையங்கள், ராமநாதசுவாமி உள்ளிட்ட முக்கிய கோயில்கள் ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது. ரயில் தண்டவாளங்கள் அந்ததந்தப் பகுதி வருவாய் அலுவலா்கள் துணையுடன் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டன. மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், காய்கறிச் சந்தைகள், கோயில்களிலும் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் காவல் கண்காணிப்பும், வாகனச் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.