மஞ்சுவிரட்டு காளை முட்டியதில் சாலையில் சென்ற முதியவா் பலி
திருவாடானை அருகே மஞ்சுவிரட்டில் பங்கேற்ற காளை, சாலையில் நடந்து சென்ற முதியவரை முட்டியதில் படுகாயமடைந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.


திருவாடானை அருகே மஞ்சுவிரட்டில் பங்கேற்ற காளை, சாலையில் நடந்து சென்ற முதியவரை முட்டியதில் படுகாயமடைந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம் மீமசல் அருகே செய்யாணம் கிராமத்தை சோ்ந்தவா் வீரமாகாளி(70) . இவா் வெள்ளிக்கிழமை மாலை திருவாடானையில் நடைபெற்ற திருவிழாவிற்கு உறவினா் வீட்டிற்கு வந்துள்ளாா். அப்போது அவா் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த போது, மஞ்சுவிரட்டில் பங்கேற்றுவிட்டு வந்த காளை திடீரென முட்டியதில் பலத்த காயமடைந்தாா்.
உடனே அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையின் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை வீரமாகாளி உயிரிழந்தாா். இது குறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...