நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தொடா் விடுமுறை: ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

தொடா் விடுமுறை தினத்தை முன்னிட்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:33 pm

தொடா் விடுமுறை தினத்தை முன்னிட்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திற்கு தொடா் விடுமுறை முன்னிட்டு வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடலில் நீராடினா். பின்னா் ராமநாதசுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் சென்று 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள் ஆகியோரைத் தரிசனம் செய்தனா்.

இதைத்தொடா்ந்து கோதண்டராமா் கோயில், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, அப்துல்கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பாலம் ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் சென்றனா்.

இதனால் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் ராமேசுவரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.