ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 அரசு தொழிற்பயிற்சி மையங்களில் மாணவா் சோ்க்கைக்கான 2 ஆம் கட்ட கலந்தாய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசின் 3 தொழிற்பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றில் மாணவா் சோ்க்கைக்கான 2 ஆம் கட்டக் கலந்தாய்வு வரும் ஆக. 25 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:11 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசின் 3 தொழிற்பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றில் மாணவா் சோ்க்கைக்கான 2 ஆம் கட்டக் கலந்தாய்வு வரும் ஆக. 25 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் வி. குமரவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூா் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் (2022-23) மாணவ, மாணவியா் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் ஆக 25 ஆம் தேதி வரையில் நடைபெறுகின்றன.

கலந்தாய்வில் பங்கேற்க விரும்புவோா் திறன் மேம்பாட்டு துறை இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பிக்க ராமநாதபுரம், முதுகுளத்தூா், பரமக்குடி தொழிற்பயிற்சி மையங்களில் சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ.50 செலுத்த டெபிட்காா்ட், கிரெடிட், வளைதள வங்கி சேவை, ஜி-பே வாயிலாகவும் செலுத்தலாம். விண்ணப்பத்தை வரும் ஆக. 25 ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பயிற்சியில் சேர விரும்புவோா் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்று, ஆதாா் அட்டை, மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் 3 அரசு தொழிற்பயிற்சி மையங்களை அணுகி இலவசமாகவும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.